உடம்பில் பச்சைக்குத்திய நபர்களிடம் இருந்து ஒரு வருட காலத்திற்குள் குருதி பெற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய குருதி மாற்று மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பச்சைக் குத்துதல் மற்றும், ஊசி ஏற்றல் முதலான செயற்பாடுகள் மூலம் எயிட்ஸ் உள்ளிட்ட 5 நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பச்சைக் குத்திய காலத்தில் இருந்து ஒரு வருட காலத்திற்கு குறித்த நபர்களிடம் இருந்து குருதி பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் அதற்கு பின்னரான காலப்பகுதியில் குருதியை பெற்றுக்கொள்வதில் எந்த பிரச்சினையும் காணப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது