“பண்டாரநாயக்கவால்தான் தமிழ்த் தலைவர்களுக்கு கல்வி கிடைத்தது” – சம்பிக்க

” பண்டாரநாயக்க சிங்கள மொழியை அரச மொழியாக்கியதால்தான் நாட்டில் இனப்போர் வெடித்தது என்ற கருத்தை ஏற்க முடியாது. அவர் அன்று தமிழ் மொழியையும் நிர்வாக மொழியாக்கியதால்தான் பிரபாகரனுக்குகூட கல்வி கிடைத்தது.” – என்று குடியரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு

” அன்று தேர்தலில் கொத்தலாவெல வெற்றிபெற்றிலுந்தாலும் சிங்கள மொழியை அரச மொழி ஆக்கி இருப்பார். பண்டாரநாயக்க அத்தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு சிங்களத்தை அரச மொழியாக்கினார். வடக்கு, கிழக்கில் தமிழ்மொழியை நிர்வாக மொழியாக்கினார்.

இத்திட்டத்தை அவர் உடன் அமுலாக்கவில்லை. 1956 இல் திட்டம் வந்திருந்தாலும் ஐந்தாண்டுகளுக்கு பின்னரே அதாவது 1961 ஜனவரி முதல்தான் அத்திட்டம் நடைமுறைக்கு வந்தது.

எனவே, 1956 இல் சிங்கள மொழி அரச மொழியானது, இதனால் தமிழர்கள் வீழ்ச்சியடைந்தனர் என்ற கருத்தை முழுமையாக ஏற்க முடியாது. ஏனெனில் வடக்கு, கிழக்கில் ஆங்கில மொழியில் கல்வி நடவடிக்கை இடம்பெற்றுவந்த நிலையில், பண்டாரநாயக்கவால்தான் தமிழ் மொழியில் கல்வி பயில முடிந்தது.

சிங்கள மொழியை அரச மொழியாகவும், தமிழை வடக்கு, கிழக்கில் நிர்வாக மொழியாகவும் ஆக்கி இருக்காவிட்டால் நாம் விவசாயிகளின் பிள்ளைகளாக, விவசாயத்தை பார்த்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும். இதனை பலர் மறந்துவிட்டனர்.

பண்டாரநாயக்க சிங்கள மொழியை அரச மொழியாக்கியதால்தான் நாட்டில் இனப்போர் வெடித்தது என்ற கருத்து ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. நாடாளுமன்றத்தில் இன்றுள்ள தமிழ்த் தலைவர்கள், அதேபோல பிரபாகரன் உள்ளிட்டோருக்கு அன்று எடுத்த முடிவால்தான் கல்வி பயில முடிந்தது. ஏனெனில் பண்டாரநாயக்க இத்திட்டத்தை கொண்டுவந்த காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் ஆங்கில மொழியை கதைக்ககூடியவர்கள் 7 வீதமே இருந்தனர். ஏனையே 93 வீதமானோருக்காக எடுக்கப்பட்ட முடிவு அது.” – என்றார்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles