அமைச்சரவை பேச்சாளராக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அமைச்சரவை இணைப்பேச்சாளராக அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, உதயகம்மன்பில ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று (19) நடைபெற்றது. இதன்போதே மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இடைக்கால அரசாங்கத்தின் இணை அமைச்சரவைப் பேச்சாளராக இருந்த பந்துல குணவர்தன இம்முறை அமைச்சரவை இணைப்பேச்சாளர் பதவி வேண்டாம் என கூறிவிட்டார். அவரின் இடத்துக்கே கம்மன்பில நியமிக்கப்பட்டுள்ளார்.