பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது: மொட்டு கட்சி கொதிப்பு!

” பிரபாகரனுக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பதிவுகளை பதிவிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் பிரபாகரனை கடவுள் என விளித்து மாவீரர் தின நிகழ்வுகளை நடத்தியவர்களுக்கு எதிராக இன்னும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சீறிப்பாய்ந்துள்ளது.

கொழும்பிலுள்ள அக்கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கூறியவை வருமாறு,

” மக்கள் மத்தியில் குரோதத்தை விதைப்பதற்கு ஜே.வி.பியினர் சமூகவலைத்தளங்களையே பயன்படுத்தினர். போலியான தகவல்களை சமூகவலைத்தளங்களில் பரப்பி அரசியல்வாதிகளின் வீடுகளை தீக்கிரையாக்குவதற்கு வழிவகுத்தனர்.
ஆனால் தற்போது ஆட்சி அதிகாரம் அக்கட்சியினருக்கு கிடைத்துள்ள நிலையில், சமூக ஊடக செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் செயல் முன்னெடுக்கப்படுகின்றது. சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவதை நாம் கண்டிக்கின்றோம்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் எனக் கூறிவந்த ஜே.வி.பியினர் அந்த சட்டத்தின்கீழ்தான் கைதுகளை செய்துள்ளனர்.

வடக்கு, கிழக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின. நிகழ்வு நடக்கவில்லை எனக் கூறமுடியாது. அந்நிகழ்வு பற்றி கதைத்த சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது சமூக ஊடக செயற்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகும்.

பிரபாகரனுக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் இடப்படும் பதிவுகளுக்கு எதிராக பொலிஸார் செயற்பட்டுள்ளனர். ஆனால் பிரபாகரனை கடவுள் என விளித்து, மாவீரர் தின நிகழ்வுகளை நடத்தியவர்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமை கவலையளிக்கின்றது.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles