கொழும்பு, குதிரை பந்தயத் திடலில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட யுவதி அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம, கிரவத்துடுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பீடத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
