மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன சோளங்கந்தை தோட்டத்தில் பாடசாலை மாணவியொருவர் இன்று (7) முற்பகல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சோளங்கந்தை தோட்டத்தை சேர்ந்த 19 வயதுடைய தனுசியா என்ற உயர் மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இம்முறை உயர்தரப்பரீட்சைக்கு அவர் தோற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
குறிப்பிடத்தக்கது.
குறிப்பு – (எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை என்பது தீர்வல்ல, அது கோழைத்தனமான முயற்சி – முடிவாகும். எனவே, வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினை, எப்படிவந்தாலும் எதிர்நீச்சல் போடுவதற்கு நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.)