பாடசாலை விடுமுறை குறித்து வெளியாகியுள்ள அறிவித்தல்

2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் செப்டம்பர் 20 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மூடப்படும் என கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை செப்டம்பர் 23 ஆம் திகதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 19ம் திகதி பாடசாலை நேரம் முடிந்ததும் வாக்கு எண்ணும் மையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் கிராம நிர்வாக அலுவலர்களின் கட்டுப்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles