பாதுகாப்பு அச்சுறுத்தல்: மூவர் கைது!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அவர்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர் எனவும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் கூறினார்.

விசாரணைகளுக்கு தடங்கள் ஏற்படக்கூடும் என்பதால் கைதானவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிடமுடியவில்லை எனவும், வெளிநாட்டு உளவு அமைப்பொன்றிடமிருந்தே புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், வெளிநாட்டு பயணிகளுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும, எவரும் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை எனவும் அமைச்சர் அறிவித்தார்.

Related Articles

Latest Articles