‘பாராளுமன்றத்துக்கு தெரிவான முதல் பௌத்த துறவி கொரோனாவால் உயிரிழப்பு’

லங்கா சமசமாஜக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பத்தேகம சமித தேரர் (வயது – 68) இன்று காலமானார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அவர், மாத்தறையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையிலேயே, ‘கொவிட் நிமோனியாவால்’ உயிரிழந்துள்ளார்.

2001 முதல் 2004 வரை இவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். இலங்கை பாராளுமன்றத்துக்கு தெரிவான முதல் துறவி இவராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles