ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்த பாலித ரங்க பண்டார நீக்கப்பட்டுள்ளார் என சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை தலதா அத்துகோரளவுக்கு வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, எம்.பி. பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
