இலங்கையைச் சேர்ந்த நபரொருவர் பிரான்சில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 31 வயதுடைய தனபாலசிங்கம் தர்சிகன் என்ற இளம் குடும்பஸ்தர் என தெரியவந்துள்ளது.
பிரான்சில் திருமணம் செய்து இரண்டு வருடங்களில் இரத்தப்புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ள இவர் கிளிநொச்சி பளையினை சேர்ந்தவராவார். தாயகத்தில் யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விண் மீன் அமைப்பு ஊடாக பல உதவிகளை செய்து வந்தவர்.