பெங்களூரு அணியிடம் மண்டியிட்டது ஐதராபாத்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

13ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.  இந்த நிலையில் துபாயில் நேற்று இரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய  பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரராக இளம் அறிமுக வீரர் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்சுடன் இணைந்து களம் இறங்கினார். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி நல்ல தொடக்கம் ஏற்படுத்தினார்கள். நடராஜன் வீசிய ஒரு ஓவரில் தேவ்தத் படிக்கல் 3 பவுண்டரிகள் விளாசினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவர்) அந்த அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்தது. ரஷித் கான் வீசிய ஓவர் ஒன்றில் ஆரோன் பிஞ்ச் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சருக்கு பந்தை விரட்டியடித்தார்.

அணியின் ஸ்கோர் 11 ஓவர்களில் 90 ரன்னாக உயர்ந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. தேவ்தத் படிக்கல் 56 ரன்னில் (42 பந்து, 8 பவுண்டரி) விஜய்சங்கர் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்த ஓவரில் ஆரோன் பிஞ்ச் 29 ரன்னில் (27 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) அபிஷேக் ஷர்மா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார். இதனை தொடர்ந்து கேப்டன் விராட்கோலி 13 பந்தில் 14 ரன் எடுத்த நிலையில் நடராஜன் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனை அடுத்து ஷிவம் துபே, டிவில்லியர்சுடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய டிவில்லியர்ஸ் (51 ரன்கள், 30 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி ஓவரில் ‘ரன்-அவுட்’ ஆனார். அதே ஓவரில் கடைசி பந்தில் ஷிவம் துபே (7 ரன்) ‘ரன்-அவுட்’ ஆகி பெவிலியன் திரும்பினார். 20 ஓவர்களில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. ஜோஷ் பிலிப் 1 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் டேவிட் வார்னர் 2-வது ஓவரில் 6 ரன்னில் ‘ரன்-அவுட்’ ஆகி நடையை கட்டினார். இதனை அடுத்து மனிஷ் பாண்டே, ஜானி பேர்ஸ்டோவுடன் இணைந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடியது. மனிஷ் பாண்டே 33 ரன்னில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோ 61 ரன்னில் (43 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் போல்டு ஆனார். அதன் பிறகு விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. அடுத்து வந்த விஜய் சங்கர் விக்கெட்டை சாஹல் முதல் பந்திலேயே கைப்பற்றினார். பிரியம் கார்க் 12 ரன்னிலும், அபிஷேக் வர்மா 7 ரன்னிலும், புவனேஷ்வர்குமார் ரன் எதுவும் எடுக்காமலும், ரஷித் கான் 6 ரன்னிலும், பவுலிங்கின் போது அடைந்த காயத்தை பொருட்படுத்தாமல் இறங்கிய மிட்செல் மார்ஷ் ரன் எதுவும் எடுக்காமலும், சந்தீப் ஷர்மா 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

19.4 ஓவர்களில் ஐதராபாத் அணி 153 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் பெங்களூரு அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடராஜன் 3 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles