40,000 மெட்ரிக் தொன் பெற்றோல் ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளது.
இது நேற்றைய தினம் நாட்டை வந்தடையவிருந்த நிலையில், கப்பல் வருவதில் ஒரு நாள் தாமதமாகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
அதுவரையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெற்றோல் விநியோகிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
எவ்வாறிருப்பினும் எரிபொருள் இருப்பு குறைந்து வருவதால், எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் தொடர்கின்றன.










