பொருளாதார விவகார அமைச்சை கோருகிறார் தம்மிக்க பெரேரா

” தற்போதைய நெருக்கடி நிலைமையை சமாளிக்ககூடிய அமைச்சு பதவியொன்றை ஜனாதிபதி வழங்கினால் அதனை ஏற்பதற்கு நான் தயார்.”  – என்று நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

‘பொருளாதார விவகாரம்’ தொடர்பான விடயதானமும் அதனுடன் இணைக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.

Related Articles

Latest Articles