மக்களை வதைக்கும் ‘வரி சூத்திரம்’ – சஜித் கடும் சீற்றம்!

” பெறுமதி சேர் வரியை (வெற் வரி) 18 சதவீதமாக அதிகரிப்பது வரி சூத்திரத்தை குழப்பியடிக்கும் செயல் என்பதுடன், இந்த பிற்போக்கான வரி அதிகரிப்பானது மக்கள்மீது மேலும் சுமையை திணிக்கும் செயலாகும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழுவுடன் நேற்று (31) நடந்த கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரச வரி நிர்வாகத்தில் எந்தவொரு மாற்றத்தையும் அரசு செய்யாதுள்ளது , வரி நிர்வாகத்தை டிஜிட்டல் மயமாக்குதல், நவீனமயமாக்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றின் மூலம் அரச வருவாயை அதிகரிக்க முடியும் , இவ்வாறு வரி செலுத்தாதோர் தொடர்பில் உகந்த நடவடிக்கையும், அறவீட்டையும் மேற்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சாதாரண மக்களிடமிருந்து வரி வருவாயை அதிகரித்து அரச முற்படுகின்றது.

பெறுமதி சேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்து சாதாரண மக்களின் வரிச்சுமையை அதிகப்படுத்துவது கீழ்த்தரமான செயலாகும்.”

Related Articles

Latest Articles