மனோ கொள்கைவாதி – இ.தொ.கா. சந்தர்ப்பவாதி! சுமந்திரன் விளாசல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்தவரை மஹிந்த ராஜபக்ச துரத்தப்படப் போகிறார் எனத் தெரியவந்த பின்னரே அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறி வித்துள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான, எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தாம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப் பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

” மற்றைய கட்சிகளை நான் பெரிதும் விமர்சிப்பது கிடையாது. ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்தவரை மஹிந்த ராஜபக்ச துரத்தப்பட போகிறார் எனத் தெரியவந்த பின்னரே அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித் துள்ளனர்.

தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு கொல்லப்பட்ட போது அமைச்சுப் பதவிக்காக ஒட்டிக்கொண்டிருந்தவர்களே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.

மஹிந்த ராஜபக்ச பலமாக இருந்தி ருந்தால் ஜீவன் தொண்டமானின் வாயி லிருந்து அந்த வார்த்தை வந்திருக்குமா என்பது தொடர்பில் எனக்கு பாரிய சந்தேகம் உள்ளது. அது அவர்களது அரசியல்.அதிகாரத்துக்கு பின்னாலும் சலுகைக்குப் பின்னாலும் செல்வது சிலருக்கு வாடிக்கையாகிப்போய்விட்டது.

மனோ கணேசன் இந்த விடயத்திலே மிகவும் பொறுப் பானவராக ஒரு கொள்கைப் பிடிப்போடு இருப்பவர். அதிகாரத்துக்கு பின்னாலோ அமைச்சுப் பதவிக்கு பின்னாலோ சலு கைக்காகவோ சென்றவர் அல்லர். இந்த விடயத்திலே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை நிலைப்பாட்டோடு பயணிக்க கூடிய ஒருவராக அவரை நாங்கள்அறிகிறோம். ஒருசிலர் அங்கேயும் இங்கேயுமாக இருக்கிறார்கள். இது பாரிய
நுணுக்கமான கலை. – என்றார்.

Related Articles

Latest Articles