மரக்கிளை முறிந்து விழுந்ததில் சிறுமி பலி – பூண்டுலோயாவில் சோகம்

பூண்டுலோயா பாலுவத்த பகுதியில் வாகை மரக்கிளை முறிந்து விழுந்ததில் 17 வயது சிறுமியொருவர் பலியாகியுள்ளார்.

அக்கரப்பத்தனை உருலவள்ளி பகுதியை சேர்ந்த 17 வயதான விஜயராஜ் திவ்யராணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிந்த சிறுமியின் சடலம் கொத்மலை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நிருபர்கள் – நீலமேகம் பிரசாந்த், கௌசல்யா

 

Related Articles

Latest Articles