மார்ச் 04 ஆம் திகதி உள்ளாட்சி தேர்தல்! எடுக்கப்பட்டது முடிவு!!

உள்ளாட்சிமன்ற தேர்தலை மார்ச் 04 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது.

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டமொன்று இன்று கொழும்பில் நடைபெற்றது.

இதன்போது மார்ச் 10 ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதுடன், தேர்தலை மார்ச் 4 ஆம் திகதி நடத்துவது பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், உள்ளாட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை மறுதினத்துக்குள் வெளியிடப்படவுள்ளது.

பிரதேச சபைகள், நகரசபைகள் மற்றும் மாநகரசபைகள் என 340 உள்ளாட்சிமன்றங்களின் பதவிகாலம் ஓராண்டுகாலம் நீடிக்கப்பட்டது. இதன்படி 2023 மார்ச் 20 ஆம் திகதிக்குள் புதிய சபைகள் நிறுவப்பட வேண்டும்.

அதேபோல தேர்தலை நடத்துவதற்கான நிதியையும், திறைசேரியிடமிருந்து தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.

Related Articles

Latest Articles