முகக்கவசமின்றி வருபவர்களுக்கு எரிபொருள் இல்லை

மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு எரிபொருள் வழங்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், எரிபொருள் நிலையங்களுக்கு வருபவர்களுக்கு சுகாதார வழிகாட்டகல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Articles

Latest Articles