முகநூல் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான விஷேட தொலைப்பேசி இலக்கம்

முகநூல் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான தொலைபேசி இலக்கமொன்றினை கணினி அவசர பிரிவு அறிமுகம் செய்துள்ளது.

101 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என இலங்கை கணினி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

போலி முகநூல் கணக்குகள், ஒன்லைன் மூலம் குழந்தைகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குதல், ஹேக்கிங் மற்றும் பிற தவறான செயற்பாடுகளில் ஈடுப்படுதல் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியும்.

இதற்கமைய, முகநூல் சார்ந்து மாதத்திறகு ஆயிரத்துக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றை எழுத்து மூலமாக மின்னஞ்சலில் அனுப்பலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேற்படி கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles