திம்புல – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபீல்ட் தோட்டத்தில் 13 வயதுடைய மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தினார் எனக் கூறப்படும் 60 வயது நபரும், அவருக்கு உடந்தையாக இருந்த 40 வயது நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவி பத்தனை பொலிஸாரால் , சட்ட வைத்திய அதிகார பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது பல தடவை குறித்த 60 வயது நபரால் மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியமை மற்றும் அதற்கு 40 வயதுடைய நபர் உதவி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந் நிலையில் சந்தேக நபர் ஹட்டன் நீதிமன்ற பதில்நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 19 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .