முன்னூறு அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி தடையை மேலும் தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க அடுத்த வாரம் முதல் இதை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கமானது கடந்த ஜூன் (09) முதல் இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் சில உணவுப் பொருட்கள் உள்ளிட்ட முன்னூறு பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
இதையடுத்து ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் 300 அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வாகனங்கள் இறக்குமதிக்கான அனுமதியையும் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். ஆனால், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு இதற்கான அனுமதியை இப்போதைக்கு வழங்க முடியாது என நிதியமைச்சு அவர்களுக்குப் பதிலளித்தது.
நாட்டின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பியதும் வாகன இறக்குமதியாளர்களின் கோரிக்கை தொடர்பில், கவனம் செலுத்தப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
