மொனறாகலை, படல்கும்பர – அலுபொத்த பகுதியில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (19) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட ஐம்பது பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே புதிய தொற்றாளர்கள் 50 பேர் இவ்வாறு இனங்காணப்பட்டனர்.
இவர்களை தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை படல்கும்பர பொது சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
படல்கும்பர பகுதியில் இதுவரை 43 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. இதனிடையே படல்கும்பர நகரத்திற்கு அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வருகை தரவேண்டுமெனவும் உரிய சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நடராஜா மலர்வேந்தன்
