பிரேசில் அணியின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.40 வயதான ரொனால்டினோ தனது வீட்டிலேயே தன்னை சுயதனிமைக்கு உட்படுத்திக்கொண்டுள்ளார்.
பிரேஸில் அணி 2002 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெல்ல முக்கிய வீரராக இருந்தவர் ரொனால்டினோ. பிரேஸிலின் சிறந்த கால்பந்தாட்ட வீரரான ரொனால்டினோ 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான ஃபிஃபா விருதினையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.