தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவை பெரும் புயல் தாக்கிய நிலையில் 2 ஆயிரம் பேர் வரை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லிபியாவில் கனமழை பெய்து வரும் சூழலில் டேனியல் புயல் லிபியாவை தாக்கியது. இதனால் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நிலையில் டெர்னாவில் உள்ள பாலங்களும் அணைகளும் இடிந்தது. இதனால் அந்நகரமே நீரில் மூழ்கியது.
இந்த புயலின் காரணமாக 2000 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த புயல் காரணமாக 10 ஆயிரம் பேர் வரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு வரும் அதே சூழலில் மீட்புக் குழுவினர் காணமல் போனவர்களையும் தேடி வருகின்றனர். டெர்னாவில் 25% அழிந்துவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.










