பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.
நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் வசந்த முதலிகே நேற்று (27) கறுவாத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.