வவுனியா – செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவரு வதாவது,
அதிகாலை குறித்த வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது இனந்தெரியாத நபர்கள் வீட் டுக்குள் நுழைந்து தாக்குதல்மேற்கொண்டதுடன், வாள்வெட்டுத் தாக்குதலிலும் ஈடுபட்டனர்.
இதன்போது வீட்டில் இருந்த முதியவர்களான ஐயர் மற்றும் அவரது மனைவி அத்துடன், குறி;த வீட்டில் இருந்த மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்களில் மூவர் செட்டிக்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் வவு னியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்ற நிலையில் பறயநாலங் குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.