ஹெல்மெட்க்குள் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்து, ஆலயப் பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்ட நபரொருவர், குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை மன்னாரில் இடம்பெற்றுள்ளது. மன்னார் சாவற்காடு புனித அந்தோனியார் ஆலயப் பகுதியில் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்த நபரை பொலிஸார் சோதனை செய்தபோது ஹெல்மெட்க்குள் ஐஸ் போதைப் பொருள் இருக்கக் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிட மாகவும் வவுனியாவை வளர்ப்பிடமாகவும் கொண்ட 31 வயதுடைய நபர் ஒருவரே 20 கிராம் 850 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் இச் சந்தேக நபர் விடத்தல்தீவிலிருந்து மன்னாருக்கு இதனை வியாபாரத்துக்குக் கொண்டு வந்தார் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.