பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
அத்துடன் தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளம் நாடாளுமன்றத்தின் ஊடாகவே நிர்ணயிக்கப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் விரைவில் சாதகமான தீர்வு எட்டப்படும் என நம்புவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண சபையில் தெரிவித்தார்.