ராஜபக்சக்களுக்கிடையில் நேற்றிரவு முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர் அதில் பங்கேற்கவில்லை என்றே தெரியவருகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை இத்தாலி செல்வதற்கு முன்னதாகவே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.