” தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்ற அனைத்து சபைகளிலும் நாம் நிச்சயம் ஆட்சியமைப்போம்.” – என்று பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
” தேர்தல் காலத்தில் மொட்டுகட்சி, தொலைபேசி கட்சி , யானைக் கட்சி என்பன ஒன்றையொன்று விமர்சித்துக்கொண்டன. தற்போது அதிகாரத்தைக் கைப்பற்றி மீண்டும் ஊழலில் ஈடுபட கூட்டு சேர்கின்றன.
அக்கட்சிகளின் போலி நாடகம், போலி முகத்திரை மக்களுக்கு தெரியும்.
அப்படி சபையை அமைத்தால்கூட ஓரிரு வாரங்களுக்குகூட சபையை இவர்களால் நடத்த முடியாது. தவிசாளர், உத தவிசாளர் அதிகார போட்டியிலேயே காலம் சென்றுவிடும்.
எனவே, தேசிய மக்கள் சக்திதான் ஆட்சி அமைக்கும். தவிசாளர்கூட எமது கட்சியை சார்ந்தவரே நியமிக்கப்படுவார்.” – என்றார்.