அன்று நாட்டைக் கொளுத்தியவர்களால் இன்று நாட்டை மீட்க முடியுமா?

ரணில் விக்கிரமசிங்கமும், அனுர குமார திசநாயக்கவும் புதிய அரசியல் திருமண விருந்து உண்ணுகின்றார்கள். இவர்கள் இருவருக்கும் நாட்டை கட்டி எழுப்ப வேண்டிய தேவை இல்லை. இவர்களில் ஒருக்கும் மக்களின் இதயத்துடிப்பு தெரிவதில்லை. 220 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பு ஆசை, துன்பம், வேதனை, என்பவற்றையும் அறிவதில்லை. இவர்களில் மற்றவர் அனைத்தையும் சீரழிக்கின்ற எரியூட்டுகின்ற சமூக படுகொலைகளை முன்னிலைப்படுத்தி செயற்படுகின்றவர். 200 ஆடைத் தொழிற்சாலைகளை உருவாக்குகின்ற பணி முன்னெடுக்கப்பட்ட போது துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரேமதாச உருவாக்கும் ஆடை தொழிற்சாலைகளை தீயிட்டு கொளுத்துவதாக எச்சரிக்கை விடுத்தவர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த நாட்டை ராஜபக்சர்கள் சீரழித்து இந்த நாட்டிற்குள் பிளவை ஏற்படுத்திருக்கின்றார்கள். நாட்டை தீயிட்டு கொளுத்துகின்றவர்களுக்கு, கொலைகளை செய்கின்றவர்களுக்கு இந்த நாட்டை கட்டி எழுப்ப முடியாது. ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்து நாட்டிற்கு சேவை செய்யும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2024 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 36 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஹோமாகம நகரில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தத் தேர்தலில் பிரிகோடு தெளிவாக விளங்குகின்றது. இந்த நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்களும் ரணில் விக்ரமசிங்கவினதும், அனுரா குமார திசாநாயக்கவினதும் அரசியல் கூட்டை சரியாக விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் இருவரினது நோக்கம் சஜித் பிரேமதாசவை தோல்வி அடையச் செய்வதாகும். அவர்களின் நோக்கம் அப்படி இருந்தாலும், தமதும் ஐக்கிய மக்கள் சக்தியினதும், ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் பொதுவான நோக்கம் வீழ்ச்சி அடைந்திருக்கின்ற இந்த நாட்டை இந்த மிகப்பெரிய அனர்த்தத்தில் இருந்து மீட்டெடுத்து, சுபிட்சமான நாளைய தினத்திற்காக 2020 இலட்சம் மக்களையும் முன்னெடுத்துச் செல்வது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles