அரசியலில் இருந்து ஓய்வுபெறும் கால எல்லையை அறிவித்தார் தயாசிறி!

” ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப்பதவியைக் கைப்பற்றுவதற்கு நான் சூழ்ச்சி செய்யவில்லை. தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கடும் அதிருப்தியிலேயே இருக்கின்றேன்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தயாசிறி ஜயசேகர இடைநிறுத்தப்பட்டுள்ளார், பொதுச்செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் பற்றி எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நெருக்கடியான காலத்தில் கட்சியுடன் இருந்தேன், கட்சிக்காக உழைத்தேன், ஆனால் கட்சி தலைமையிடம் சிலர் கோள்மூட்டியுள்ளனர். தலைமைப்பதவியை கைப்பற்றும் திட்டம் என்னிடம் இல்லை. அப்படியான துரோக அரசியலில் ஈடுபட்டதும் கிடையாது.

நான் சுதந்திரக்கட்சிகாரன், அடித்து விரட்டினாலும் கட்சியை விட்டுபோகமாட்டேன், கட்சிக்குள் இருந்துகொண்டு மாற்றத்துக்காக போராடுவேன், தொடர்ந்தும் நெருக்கடிகள் வந்தால், எனது அரசியல் எதிர்காலம் குறித்து ஆதரவாளர்கள் முடிவெடுப்பார்கள்,

நான் தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபடபோவதும் இல்லை. இன்னும் 10 ஆண்டுகள்வரைதான் அரசியலில் இருக்கலாம்.” – என்றார்.

Related Articles

Latest Articles