அரச அதிகாரிகளிடம் சண்டிதனம் காட்டிய மொரட்டுவ மேயர் கைது!

மொரட்டுவ மேயர்  சமன் லால் பெர்ணான்டோ, கல்கிசை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் பணியின்போது வைத்தியர் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிசை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

தன்னால் தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியலில் உள்ளவர்களுக்கே தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை மேயர் விடுத்திருந்தார்.

Related Articles

Latest Articles