‘ அறுகம்பே தாக்குதல் திட்டம் தொடர்பான சம்பவம் தொடர்பில் இதுவரையில் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளும் தொடர்கின்றன.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது, ‘ அறுகம்பே சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல் உண்மையானதா, அல்லது எவரேனும் போலியான தகவலை வழங்கியுள்ளனரா? இதன் உண்மை தன்மை என்ன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ அறுகம்மே சம்பவம் தொடர்பில் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன. நீதிமன்றத்துக்கும் தகவல்களை வழங்கியுள்ளோம். விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை. எனவே, உண்மையா, பொய்யா என்பதை தற்போதே கூறிவிடமுடியாது.”- என்றார்.










