இலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இன்று (23) கொழும்பு வரவிருந்த சயிட் ஹப்ரிடி, விமானத்தை தவறவிட்டுள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டுள்ள ஹப்ரிடி, வெகுவிரைவில் இலங்கை வந்து எல்.பி.எல். போட்டிகளில் பங்கேற்பேன் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரராக விளங்கிய ஹப்ரிடி, எல்.பி.எல். தொடரில் Galle Gladiators அணியில் இடம்பிடித்துள்ளார். மாலிங்க பங்கேற்காததால் ஹப்ரிடியே தலைவராக செயற்படுவார்.