ஆளுங்கட்சியின், கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையில் மாலை 4.00 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன.
