இந்தியாவில் ஒமைக்ரொன் கொவிட் திரிபுடனான முதலாவது மரணம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் இதுவரையில் 2,135 ஒமைக்ரொன் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.