இனவழிப்பு நினைவுகூரலுக்கு இடமளிக்ககூடாது!

“ வடக்கில் இனவழிப்பு நினைவு கூரப்படுவது தவறான விடயமாகும். அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.”- என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

“ போரில் உயிரிழந்த தமது உறவுகளையே நினைவு கூருகின்றோம் என அவர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகின்றது. இறந்தவர்களை நினைவு கூருவது தவறில்லை. ஆனால் பிரபாகரன் உயிரிழந்த இடத்துக்கே சென்று, அவர் இறந்த நாளில் அதனை செய்வது தவறு.

பிரபாகரன் உள்ளிட்ட புலிகளை கௌரவப்படுத்தும் நோக்கில் அவர்களை நினைவுகூருவது தவறாகும். அது தேசத்துரோக நடவடிக்கையாகவே கருதப்படும். இப்படியான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
தேசிய பாதுகாப்பு என வரும்போது வாக்குகளைக் கருத்திற்கொள்ளக்கூடாது. முதுகெலும்புடன் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.” – எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

 

Related Articles

Latest Articles