இனவாதிகள் மற்றும் மதவாதிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இடமில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இந்நாட்டில் பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை உருவாக்குவோம். பலர் எம்முடன் இணைந்துள்ளனர். அனைத்து கட்சிகளில் இருந்தும் வருகின்றனர். சிவில் அமைப்புகளும் இணைந்துள்ளன. மேலும் பல தரப்பினரும் பேச்சு நடத்திவருகின்றனர்.
ஊழல்வாதிகள், மோசடிகாரர்கள், இனவாதிகள் மற்றும் மதவாதிகளுக்கு கூட்டணியில் இடமில்லை. இந்நாட்டில் உருவான பாரிய கூட்டணியாக எமது கூட்டணி அமையும்.” – என்றார்.