இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன் தேர்தல் – சு.க. யோசனை!

உரிய திகதிக்கு முன்னர் தேர் தலை நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செய லாளர் தயாசிறி ஜயசேகர நேற்று கோரிக்கை விடுத்தார்.

18 ஆம், 19 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நிறைவு பெறுமாக இருந்தால், 25ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துமாறு அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் பிரச்சினை அதிகரிக் கின்றது. நாம் கூட்டங்களுக்குச் செல்கின் றோம். மக்கள் கூட்டங்களுக்கு வருகின் றனர். நாம் மக்களுடன் நடமாடுகின் றோம். வேட்பாளர்களில் ஒருவர் அல் லது இருவருக்கு தொற்று ஏற்பட்டால், ஆயிரக்கணக்கானவர்களைத் தனி மைப்படுத்த வேண்டி ஏற்படும். அதன் போது, தேர்தல் அல்ல எதனையும் செய்ய முடியாமல் போகும்.

எனவே, நான் யோசனையயான்றை முன்வைக் கின்றேன். வர்த்தமானியை மாற்றிய மைத்து 25 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துங்கள் என அவர் கோரியுள்ளார்.

Related Articles

Latest Articles