இலங்கையில் அதிகமாக எலிக்காய்ச்சல் பரவும் மாவட்டமாக இரத்தினபுரி மாவட்டம் இருந்து வருவதாக மாவட்டத் தொற்று நோய் வைத்திய பிரிவின் அதிகாரி லக்மால் கோனார தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் துரிதமாக பரவி வருவதையிட்டு நேற்று ஊடகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எலிக்காய்ச்சல் தொடர்பாக இதுவரை நடத்தி வந்த பரிசோதனை முடிவுகளில் திடீர் திருப்பு முனையாக இரத்தினக்கல் அகழும் தொழிலாளர்கள் மற்றும் வயல்வெளிகளில் வேலை செய்யும் விவசாயிகள் ஆகியோரிடம் அதிகமாகப் பரவி வந்தது. எனினும் தற்போது 40 வீதமானவர்கள் மட்டுமே இத்துறை சார்ந்தோரிடம் பரவுகன்றது.
60 வீதமான நோயாளர்கள் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், சிறார்கள் ஆகியோர் மத்தியிலேயே அதிகமாக பரவி வருவது இனம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
