மோசமான வானிலை காரணமாக 2 ரயில் சேவைகளை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பதுளை வரையான புகையிரத சேவையினையும், பதுளை முதல் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் வரையான இரவு நேர அஞ்சல் புகையிரத சேவையினையே இன்று (08) ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.