சீனாவிடமிருந்து இலங்கை கொள்வனவு செய்யவுள்ள 20 மில்லியன் தடுப்பூசிகள் ஜுன் 6 மற்றும் 09 ஆம் திகதிகளில் கையளிக்கப்படும் – என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” சீனாவிடமிருந்து இலங்கை கொள்வனவு செய்யவுள்ள தடுப்பூசிகளில் 10 லட்சம் சினோ பாம் தடுப்பூசிகள் ஜுன் 06 ஆம் திகதியும் மேலும் 10 லட்சம் தடுப்பூசிகள் ஜுன் 09 ஆம் திகதியும் கையளிக்கப்படவுள்ளன.
அத்துடன், பைசர், ஸ்புட்னிக் – பை, சினோவெக் ஆகிய தடுப்பூசிகளும் எதிர்காலத்தில் நாட்டுக்கு வரவுள்ளன.” – என்றார்.
