இலங்கையில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் ‘கொரோனா’ பரிசோதனை – இன்று மூவர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 03 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,517 ஆக அதிகரித்துள்ளது.

295  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 823 ஆக இருக்கின்றது.

அதேவேளை, இலங்கையில் இதுவரையில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 90 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles