உண்டியல் குலுக்கி பணம் சேகரித்து மைத்ரியிடம் ஒப்படைத்த நபர்!

ஏப்ரல் 21 தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்டுள்ள 10 கோடி ரூபா நட்டஈட்டு தொகையை செலுத்துவதற்காக சகோதர மொழி கலைஞராக சுதத்த திலகசிறி நேற்று (17) கொழும்பு – கோட்டையில் உண்டியலை குலுக்கி பணம் சேகரித்தார்.

அதன்போது, திரட்டப்பட்ட 1810 ரூபா பணத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் கையளித்தார்.

நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட 10 கோடி ரூபா நட்டஈட்டை செலுத்தும் அளவிற்கு தன்னிடம் சொத்துக்கள் இல்லை எனவும், அதனால் பணத்தை தனது நண்பர்களிடம் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles