ஊடகவியலாளரை வேவு பார்க்கும் புலனாய்வுத் துறை : ஆசிரியர் சிவராஜாவிற்கு அச்சுறுத்தல்

குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் இரண்டு நபர்கள் இன்று தமிழன் செய்தித்தாளின் பிரதம ஆசிரியர் ஆர்.சிவராஜாவின் வீட்டிற்குள் நுழைய முயன்றனர்.

அந்த இருவரும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிவராஜாவின் தொடர்மாடிக்குடியிருப்பிற்கு வருகை தந்து அவரின் இடத்தை தேடியுள்ளனர்

எனினும் நுழைவாயிலில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இருவரையும் உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர்

இந்தச் சம்பவம் குறித்து ‘தமிழன்’ செய்தித்தாளின் ஆசிரியர் சிவராஜா பொலிசில் புகார் அளித்துள்ளார்.

சிஐடியிலிருந்து வந்தவர்கள் என்று கூறிய இவர்கள் அதிகநேரம் வாயிலுக்கு வெளியே தங்கியிருந்தார்கள் என்று அவர் இன்று காலை மின்னஞ்சல் மூலம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்

Related Articles

Latest Articles