தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து இன்று காலை 6 மணிவரை, ஊரடங்கு சட்டத்தைமீறிய 2 ஆயிரத்து 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன் 220 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளனர்.
அதேவேளை, முகக்கவசம் அணியாமல் பொதுவெளியில் நடமாடிய 75 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.