முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொது வெளியில் நடமாடிய நூற்றுக்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 150 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டுக்காக 2 ஆயிரத்து 832 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 390 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.