ஊவா மாகாணத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக முக்கியமான சில வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் பதுளை மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தேனுக்க விதானகமே, பிரதமரின் இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான் , மேஜர் தெனிபிட்டிய எம்.பி., ஆகியோருடன் விளையாட்டு துறை அதிகாரிகளுக்கும், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகளுக்கும் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலின்போது ஊவா மாகாணத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்கள் நாமல் ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டன.
1. புதிய விளையாட்டு மைதானங்களை ஏற்படுத்துதல்.
2. விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துதல்.
3. சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம்கள் நிறுவுதல்.
4. விளையாட்டுக் கழகங்களையும், விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுப் வீராங்கனைகளையும் மேம்படுத்துதல்.
5. பயிற்சி மையங்களுக்கு பல்வேறு விளையாட்டு உபகரணங்களை வழங்குதல்.